மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி தற்போது சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமங்களில் பரவும் கொரோனா வைரஸ் – புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட மத்திய அரசு!!
மம்தா பானர்ஜி:
மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி அசத்தியுள்ளார் மம்தா பானர்ஜி. ஆனால் இவர் பதவி ஏற்ற காலத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு இன்னல்கள் கிளம்பும் வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நாரதா இணையதளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் லட்சம் வாங்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து மேற்கு வங்க முதல்வரிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்திற்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதன்படி அவர் சிபிஐ அலுவலகத்திற்கு சென்று முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நாரதா மோசடி தொடர்பாக அமைச்சர் ஹக்கீமிடம் சிபிஐ விசாரணை செய்ய மம்தா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.