தமிழக அரசு பள்ளிகளில் வரவிருக்கும் புதிய மாற்றம்.., பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

0
தமிழக அரசு பள்ளிகளில் வரவிருக்கும் புதிய மாற்றம்.., பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வி தரம் மற்றும் சேர்க்கையை அதிகரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 27 ஆயிரம் அரசு பள்ளிகளில் புதிய மாற்றம் வர உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 7000 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்த லேப்களில் உள்ள கம்ப்யூட்டர்களை பராமரிக்க ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மட்டும் சுமார் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற 20, 000 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கும். மேலும் தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு டேப்லெட் வழங்குவதற்கான திட்டமும் ஜூன் மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. இது போன்று இன்னும் பல மாற்றங்கள் வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here