தமிழகத்தில் தகுதியான மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. தற்போது இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை தகுதியானவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்களிலே புதிய கட்டணமில்லா வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் பெரும்பாலானோர்க்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் புதிய வங்கி கணக்கு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.