இந்திய அளவில் டாப் நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தில் கோலிவுட்டில் ஆரம்பித்த இவரின் பயணம் தற்போது வரை நீண்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறார்.
தற்போது இவரின் connect படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஹிந்தியிலும் அட்லீயின் ஒரு படத்தில் நடிக்க ஷாருக்கானுக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் நயன்தாரா. இந்நிலையில் அட்லீயின் நெருங்கிய நண்பரான இயக்குனர் ரவிச்சந்திரன் நயன்தாராவுக்கு கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் ஒரு படத்தின் கதையை கூறியுள்ளார்.
நயன்தாரா அப்படத்திற்கு 10 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். ஏற்கனவே தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் நயன்தாரா தான் உள்ளார். இந்நிலையில் இவர் மேலும் சம்பளத்தை அதிகப்படுத்தி உள்ளது திரை உலகத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.