நாமக்கல் மாவட்ட கலெக்டராக பதவி வகித்து வந்த கதிரவன் ஐஏஎஸ், சென்னைக்கு புதிதாக வேறு ஒரு பதவியேற்க சென்ற நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
திடீர் மரணம்:
நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் ஐஏஎஸ். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, தர்மபுரி மாவட்டத்தில் துணை கலெக்டராக பதவி ஏற்றார். இதையடுத்து விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வருவாய் அதிகாரியாக பதவியேற்றார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பின் 2016ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்தார். பின் ஈரோடு மாவட்டத்தில் 33 வது மாவட்ட ஆட்சியராக பதவி ஆற்றி வந்த இவர் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.
இடஒதுக்கீடு குறித்து சர்ச்சையை கிளப்பிய “வாத்தி” பட இயக்குனர்.. இணையத்தில் வலுக்கும் கண்டனம்!!
இந்த நிலையில் புதிதாக ஒரு பதவி ஏற்பதற்காக சென்னை சென்றிருந்த இவர் அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கதிரவன் ஐஏஎஸ் இறந்துள்ளார். இந்த செய்தி, அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.