தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு மெடிக்கல்லில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவையான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி – இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ்!!
2 பெண்கள் பலி :
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புத்தூர் என்ற இடத்தில், கண்ணதாசன் என்பவர் தனிஷ்கா என்ற மருந்தகத்தை நடத்தி வருகிறார். அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தால் இரண்டு பெண்கள் உயிரிழந்ததை அடுத்து, இது சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் சென்றது. அதை பரிசோதிக்க, வாடிக்கையாளர் போல் வேடமிட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மெடிக்கலுக்கு சென்றனர்.
மாறுவேடமிட்ட அதிகாரிகள், கருக்கலைப்பு மாத்திரைகளை கேட்டபோது, 390 ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகளை 2500 ரூபாய்க்கு எந்தவித மருத்துவ பரிந்துரை சீட்டும் இல்லாமல் கண்ணதாசன் விற்பனை செய்தார். அவரை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள், மெடிக்கலில் இருந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மருந்தக விற்பனையாளருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்த பகுதி காவல் அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்