சமீப காலமாக தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து புழல் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி MP ஆ ராசாராவின் பினாமி நிறுவனமாக கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அடக்கடவுளே.., பட்டாசு வெடிக்க தடையா? .., மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!