தமிழகத்தில் முடிவுக்கு வரும் ஊரடங்கு??? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!!

0

தமிழகத்தில் தற்போது இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது குறித்தும் தமிழ் நாடு அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மாநிலத்தில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் கடுமையாக்கி, மே மாதம் 24ஆம் தேதியில் இருந்து தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். பின்னர் இந்த முழு ஊரடங்கு இந்த முழு ஊரடங்கு உத்தரவு இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டு, பின்னர் ஜூன் 7ஆம் தேதியில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here