சித்ராவின் தற்கொலை வழக்கில் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி பற்றிய பேட்டி அளிக்கையில் சித்ராவை பற்றி கூறியுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பத்திரிகையாளர்கள் கமலஹாசனின் சுற்று பயணத்தை பற்றி கேள்வி எழுப்ப அதற்கு அவர் இத்தனை மாதங்களாக உயிர் பயத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இப்பொழுது தேர்தலுக்காக சுற்றுப்பயணம் செய்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல தான் இவரின் சுற்று பயணமும் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவில் பெண்களுக்கு இருக்கும் ஒதுக்கீட்டை பற்றியும் விவரித்தார். அடுத்ததாக சித்ரா தூக்கில் தொங்கியபோது தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அமைச்சரின் கார் வந்திருந்ததாக தகவல்கள் வெளியானது.
‘என்னால தான் சித்ராவுக்கு இவ்வளவு பிரச்சனை’ – கதறி அழும் கதிர்!!
அதனை பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பவே, அதற்கு அமைச்சர் நடிகை சித்ரா தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் அமைச்சரின் கார் வந்தது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மேலும் அது ஆதாரமற்ற குற்றசாட்டு. இதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. போலீசார் இதனை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.