‘என்னால தான் சித்ராவுக்கு இவ்வளவு பிரச்சனை’ – கதறி அழும் கதிர்!!

0

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் அவரது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதையே பலரால் இதுவரை நம்ப முடியவில்லை. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சித்ராவின் இறப்பு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. 8 வருட போராட்டத்தில் அவருக்கு கிடைத்த வெற்றியே இந்த பெயரும், புகழும் என்றே சொல்லலாம். இந்நிலையில் அவர் இப்படி தூக்கு மாட்டி இறந்ததை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. முல்லைக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் அதிகம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுவும் சில நாட்களாக சித்ராவிற்கு ரசிகர்கள் அதிகமாகிக்கொண்டு தான் இருந்தார்கள். இப்பொழுது அவர் இறந்துவிட்டார் என்பதையே யாராலும் மறக்க முடியவில்லை. மேலும் இதற்கு அரசியல்வாதி யாரோ அவரை தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் குமரன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சித்ராவின் மரணத்தை தாங்கி கொள்ள முடியாமல் கதறியும் அழுதார். மேலும் இந்த வீடியோ சித்ரா எப்படி இறந்தார் என்பதை பற்றி அல்ல என்று சொல்லும்போதே அவரின் குரல் உள்ளே போகிறது. ஏனெனில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக இருந்தவர்கள் என்பதால் சித்ராவை மறப்பது எளிதான ஒன்று அல்ல.

நிஷா, ரியோவின் முகத்திரையை கிழிக்கும் அனிதா!!

இந்நிலையில் சித்ராவின் இறப்புக்கு நானும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார். குமரன் சீரியலில் மட்டும் தான் நடிப்பாராம். ஆனால் சித்ரா டிவி நிகழ்ச்சி என பலவற்றில் கலந்து கொள்பவர். எனக்கு சீரியல் மட்டும் என்பதால் நடிப்பதற்கு தேதியை கொடுத்து விடுவேன். ஒரு நாள் இப்படி தான் சித்ரா நடிக்க தேதி கொடுத்துட்டீங்களா என்று கேட்க விளையாட்டாக நானும் ஆமாம் என்று சொன்னேன்.

உங்களால் தான் எனக்கும் பிரச்சனை. இதனால் நானும் அந்த டைம்முக்கு நடிக்க வேண்டியதா இருக்கு என்று விளையாட்டாக கோவித்து கொண்டார் என கூறியுள்ளார். ஆனால் எனக்கு இப்பொழுது தான் புரிகிறது அதன் உள் அர்த்தம் என்றும் கூறி கதறி அழுகிறார் குமரன். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here