தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் அவர்கள் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறவும் பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரைக்கும் 46, 216 பேருக்கு NEET பயிற்சியும், 29,279 பேருக்கு JEE பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மொத்தம் இரண்டு பயிற்சிகளுக்கும் சேர்த்து 31, 730 மாணவர்கள் பயின்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்