நடிகை மீனா குறித்து தவறான வதந்திகளை பரப்பி வரும் மர்ம நபர்கள் குறித்து, முக்கிய பதிவு ஒன்றை நெட்டிசன்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
முக்கிய பதிவு:
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், நுரையீரல் தொற்றால் கடந்த மாதம் 28ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்த சம்பவம், திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மீனாவின் கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்த நடிகை மீனா இது போன்ற தேவையற்ற பதிவுகளை தவிர்க்கவும், எங்களுக்கும் தனி உரிமை உள்ளது என இன்ஸ்டாவில் பதிவிட்டார். ஆனால் தொடர்ந்து, கணவர் இறந்த ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் நடிகை மீனா மீண்டும் ஷூட்டிங் வந்து விட்டார் என வதந்திகள் பரவியது.
ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், இது அவரது பழைய விளம்பரம் மற்றும் புகைப்படங்கள், இரண்டு மாதங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டவை. இதை யாரோ மர்ம நபர்கள் தேவையில்லாமல் பரப்பி, மீனாவுக்கு தொந்தரவு விளைவிக்கின்றனர் எனக் குறிப்பிட்டனர். மேலும் நடிகை மீனா அவ்வளவு சொல்லியும் உங்களுக்கெல்லாம் அறிவு இல்லையா? என கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்