தமிழ் சினிமாவின், முன்னணி நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர் ராவ் திடீரென உயிரிழந்த நிலையில், இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
நடிகர் பேட்டி:
கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு, பிரபல தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த வித்தியாசாகர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இவர் திடீரென உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், வித்யாசாகர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பிரபல யூட்யூப் விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அதாவது, பெங்களூரில் இருந்த இவர்கள் சென்னைக்கு வர காரணம் என்ன? இவரது மரணம் குறித்து இதுவரை மருத்துவமனை அறிக்கை வெளியிடாததன் காரணம் என்ன? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், மீனா மற்றும் அவரது மகள் நடிக்க வந்தது அவருக்கு பிடிக்காததால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதனால் தான் அவர் இவ்வளவு சீக்கிரம் இறந்து விட்டார் என்றும் அந்த வீடியோவில் பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு, திரை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்