தமிழகத்தில் இந்த பள்ளிகளுக்கு மார்ச் 8 விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் இந்த பள்ளிகளுக்கு மார்ச் 8 விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
தமிழகத்தில் திருவிழாக்கள், முக்கிய பண்டிகைகள் போன்ற நாட்களின் போது முன்னெச்சரிக்கையாக அந்தந்த மாவட்டங்களில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் வரும் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.
இதன் காரணமாக நாளை(மார்ச் 8) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 23ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here