பொதுவாக திருவிழா, பண்டிகை உள்ளிட்ட விசேஷ தினங்களை அனுசரிக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 25) திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் எண்ணற்றவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு வரும் மார்ச் 25ஆம் தேதி, நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றாலும் கூட, பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.