ஊரடங்கு தளர்வுகள்: ஜிம்கள், சலூன்கள் இன்று முதல் திறக்க அனுமதி!!!

0

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து மும்பையில் இன்று முதல் ஜிம், சலூன்கள், உணவகங்கள் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துவருகின்றன. கடந்த சில நாட்களாக, மகாராஷ்டிராவின் மும்பை, புனே, விதர்பா ஆகிய பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வருகிறது.  இதனால் மும்பையில் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

மும்பையில் இரண்டு மாதமாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் இன்று முதல் ஜிம்கள், சலூன்கள் திறக்கப்பட்டுள்ளன.அம்மாநில அரசின் புதிய உத்தரவின் அடிப்படையில், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் அனைத்து நாட்களிலும் மாலை 4 மணி வரை திறந்திருக்கலாம். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் வார நாட்களில் மாலை 4 மணி வரை திறந்திருக்கலாம்.

 

உணவகங்களில், வார நாட்களில் மாலை 4 மணி வரை 50% இருக்கை இருக்கை வசதியுடன் உணவு உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மும்பையில்  உணவகங்கள் திறக்க அனுமதி இல்லை.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here