மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்படுவதாக மத்தியபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் உத்தரவு:
மத்தியபிரதேச மாநிலத்தில், கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த வைரஸ் பரவல் தற்போது குறைந்து வருகிறது. இதனால், மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், மக்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மாநிலத்தில், ஹோலி மற்றும் ரங்கபஞ்சமி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடும் மக்கள், எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும் என்று மக்களை அறிவுறுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், கொரோனா பராமரிப்பு மையங்கள் மூடப்படும் என அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்