நாடு முழுவதும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா மூலம் இலவச LPG சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருபவர்களுக்கு, ஏற்கனவே ரூ.300 மானியம் வழங்கி வந்த நிலையில், கூடுதலாக ரூ.100 மானியத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் LPG சிலிண்டர் புக் செய்தால் 10 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும் என அறிவித்துள்ளனர்.
இந்த சலுகையை பெறுவதற்கு,
- மொபைலில் “ஏர்டெல் தேங்க்ஸ்” செயலியை பதிவிறக்கம் செய்து திறந்தவுடன்,முகப்புப் பக்கத்தில் உள்ள PAY ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- ரீசார்ஜ் & பே பில்ஸ் பிரிவின் மேல் வைத்து புக்கிங் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் Operator-ஐ தேர்வு செய்து புக்கிங் விவரங்களை பதிவிட்டு Proceed கொடுக்க வேண்டும்.
- பிறகு Pay Now என்பதைக் கிளிக் செய்து ஏர்டெல் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10% (தோராயமாக ரூ.80) கேஷ்பேக் பெறலாம். அந்த தொகை ஏர்டெல் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கவில்லையா?? முக்கிய அறிவிப்பு இதோ!!!