11 கார்கள் மீது லாரி மோதிய விபத்தால் 4 பேர் உயிரிழப்பு – தர்மபுரியில் நடந்த கொடூரம்!!

0

தர்மபுரியில் சாலை அருகே சென்றுகொண்டிருந்த 11 கார்கள் மீது லாரி மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லாரி விபத்து

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கனவாய் பகுதியில் பயங்கரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே அந்த பகுதி விபத்து ஏற்பட கூடிய ஆபத்தான இடமாகும். இந்நிலையில் அந்த தோப்பூர் கனவாய் போலீஸ் குடியிருப்பு பகுதியில் 2 லாரிகள் மோதி கொண்டுள்ளது. இதனால் அந்த இடம் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக இருந்துள்ளது.

Road accident

இந்நிலையில் அந்த போக்குவரத்து நெரிசல் தோப்பூர் கனவாய் வரை நீண்டுள்ளது. அப்பொழுது அந்த பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வழியாக சிமெண்ட் பாரத்தை ஏற்றிக்கொண்டு சேலம் வழியாக சென்றுகொண்டிருந்த லாரி திடீரென பழுதானதால் லாரியின் முன்னால் சென்றுகொண்டிருந்த 11 கார்களின் மீது ஏறி கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேருக்கு மேல் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினருடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here