ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு..!

0

இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூன் 1 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

31 ஆயிரம் பேர் பலி:

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது. உலகளவில் அமெரிக்கா தான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பா நாடுகளில் தற்போது இங்கிலாந்தை மையமாக வைத்து கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது. அங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் மார்ச் 23ம் தேதி முதல் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார். மேலும் ஜூலை 1ம் தேதி முதல் நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்னர் சிகிச்சையில் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here