தமிழகத்தில் அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாது என வெளியான செய்திகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவிருந்த சில தேர்வுகள் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59 ஆக அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்த முடியாது என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. சில அரசு ஊழியர்கள் சங்கங்களும் இந்த கருத்தை தெரிவித்ததால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
தற்போது இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், அரசு அதிகாரிகளின் ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் திட்டமிட்டபடி இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெறும். மேலும் காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் வெளியான பின்பு தான் தேர்வு அட்டவணை தயார் செய்யப்படும் என தெரிவித்தனர். மேலும் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு மறுதேதி அறிவிக்கப்பட்டு விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |