வங்கியில் கடன் வாங்கிருக்கீங்களா? உங்க கணக்கிலும் இனி ரூ. 5000 வரவு., RBI அதிரடி அறிவிப்பு!!

0
வங்கியில் கடன் வாங்கிருக்கீங்களா? உங்க கணக்கிலும் இனி ரூ. 5000 வரவு., RBI அதிரடி அறிவிப்பு!!
வங்கியில் கடன் வாங்கிருக்கீங்களா? உங்க கணக்கிலும் இனி ரூ. 5000 வரவு., RBI அதிரடி அறிவிப்பு!!

பொதுவாக நாம் வங்கியில் கடன் வாங்கினால் பிணையமாக தங்க நகைகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றை கொடுப்பது வழக்கம். அப்படி ஆதாரத்திற்கு கொடுக்கும் பத்திரங்கள் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படுவதில்லை. மேலும் கடனை திருப்பி செலுத்திய பிறகும் வாடிக்கையாளர்களிடம் விரைவாக பத்திரங்களை ஒப்படைப்பதில்லை போன்ற பல குற்றச்சாட்டுகள் வங்கிகள் மீது எழுந்து வந்தது

Enewz Tamil WhatsApp Channel 

இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் ரிசர்வ் பேங்க் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பத்திரங்களை வைத்து கடன் பெறும் வாடிக்கையாளர்கள் கடனை திருப்பி செலுத்திய பிறகு,அதிலிருந்து 30 நாட்களுக்குள் அவர்களிடம் ஆவணங்களை வங்கி ஒப்படைக்க வேண்டும். அப்படி பத்திரங்களை திருப்பி கொடுப்பதில் வங்கி தாமதம் செய்யும் பட்சத்தில், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் அபராதமாக 5000 ரூபாயை வங்கி வரவு வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்., ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டது., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here