தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறப்பு – மகிழ்ச்சியில் புத்தக பிரியர்கள்!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் பரவல் வேகம் அதிகரித்ததால் கடந்த மே 10 ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலங்கங்களும் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்த காரணத்தினால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் உள்ள நூலங்கங்களையும் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கிட்டத்தட்ட 75 நாட்களுக்கு பிறகு மாநிலத்தில் இன்று நூலங்கங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி அரசு அறிவித்த உரிய வழிமுறைகளை பின்பற்றி மாநில பொது நூலகத்துறை கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  போட்டி தேர்வுகளுக்கு தயாராவோரின் நலனை கருத்தில் கொண்டு நூலகங்கள் திறக்கப்படுகின்றன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here