சுற்றுலா பயணிகளுக்கு குளுகுளு நியூஸ்.., குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி!!

0
சுற்றுலா பயணிகளுக்கு குளுகுளு நியூஸ்.., குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி!!
சுற்றுலா பயணிகளுக்கு குளுகுளு நியூஸ்.., குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி!!

தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூட்டை தணிக்கும் விதமாக குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு குளுகுளு நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது வெள்ளப்பெருக்கு குறைந்ததன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here