30 வருடமாக பெண்ணாக வாழ்ந்த ஆண் – மருத்துவ சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

0

30 வயதான பெண் ஒருவர் புற்றுநோய் சிகிக்சைக்காக சென்றபோது அவர் ஒரு ஆண் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிர்ச்சி தகவல்..!

கொல்கத்தாவை சேர்ந்த பிரபம் வயது 30. இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு கடந்த 30 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமலும் சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்தவர். சில மாதங்களுக்கு முன் இவருக்கு அடி வயிற்றில் வலி ஏற்பட்டு சிகிக்சைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவ புற்றுநோயின் நிபுணர் டாக்டர் அனுபம் தத்தா மற்றும் அறுவை சிகிக்சை நிபுணர்கள் அவருக்கு பரிசோனத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அவரது உண்மையான பாலினத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது சோதனை செய்ததில் பிர்பமுக்கு ஆண்ட்றோஜன் இன்சென்சிட்டிவிட்டி சிண்ட்ரோம் நோய் என்பது கண்டறிப்பட்டுள்ளது. இவர் மரபணு ரீதியாக ஆணாக பிறந்துள்ளார். ஆனால் இவர் பெண்ணின் உடல் பாவனைகள் அனைத்தையும் பெற்றுள்ளது அதிர்ச்சியான தகவல்.

மருத்துவர் அனுபம் தத்தா..!

இது குறித்து மருத்துவர் தத்தா கூறுகையில், இவர் தோற்றம், குரல் மற்ற உறுப்புகளின் வளர்ச்சி அனைத்திலும் இவர் பெண் தான்.ஆனால் அவருக்கு கர்ப்பப்பை பிறந்ததிலிருந்தே இல்லை என்றும் அவர் ஒருபோதும் மாதவிடாயை அனுபவித்ததில்லை.

மேலும் அவருக்கு வயிற்று வலி என கூறியதும் பரிசோதனை செய்ததில் அவருக்கு டெஸ்டிகுலர் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவளது விந்தணுக்கள் அவரது உடலுக்குள் வளர்ச்சி அடையாமல் இருந்ததால் டெஸ்டோஸ்டிரோன் சுரக்கவில்லை அது அவருக்கு பெண்ணின் தோற்றத்தை கொடுத்துள்ளது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here