வைரஸ் பரவல் எதிரொலி.. அனைத்து தியேட்டர்களும் மூடல் – அரசு அதிரடி உத்தரவு!!

0

நம் அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தியேட்டர் மூடல்:

நம் அண்டை மாநிலமான கேரளாவில், கடந்த 4 நாட்களாக  தினசரி தொற்று பாதிப்பு 40,000 க்கு மேல் பதிவாகியுள்ளது. இதுவரை தொற்று பாதிப்பு 47 சதவீதத்தை தாண்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, திருவனந்தபுரம் மாவட்டத்தில் வைரஸ் பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த மாவட்டம் “சி” பிரிவில் சேர்க்கப்பட்டு, மிகவும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த மாவட்டத்தில், இன்று முதல் வரும் ஒரு வாரத்திற்கு அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வணிக வளாகங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் மற்றும் பூங்கா  உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here