பிப். 6 அன்று மாநிலத்தில் மீண்டும் அமலாகும் ஞாயிறு பொது முடக்கம் –  அரசு அதிரடி உத்தரவு!!

0

மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், வருகிற பிப்ரவரி 6 அன்று மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

 அரசு அறிவிப்பு:

கேரள மாநிலத்தில் வைரஸ் பரவல் மிகவும் அதிகரித்து வந்ததால், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் பெரும்பாலான, மாவட்டங்களில் தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஒரு அவசரக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி அன்று அமல்படுத்தப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் இதுவரை 84% மக்கள் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதாக தெரிவித்தார். இதுபோக, 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 71 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, முதல்வர் அறிவித்தார். மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here