கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியில், புதிதாக 2 சிறுவர்களுக்கு நோரோ எனும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, மாநில அரசு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
அரசு தகவல் :
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா எனும் வைரஸ் பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வைரஸ் தற்போது இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த வைரஸ் பரவலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், திடீரென கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் 2 சிறுவர்களுக்கு நோரோ எனும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இருவரும், மருத்துவமனையில் நலமுடன் சிகிச்சையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த பரவலை, கட்டுப்படுத்த விழிஞ்சம் பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களிடமும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், திடீரென பரவியிருக்கும் இந்த வைரஸ் சுகாதாரத் துறையினருக்கு புதிய சவாலாக அமைந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆழ்ந்த அச்சத்தில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்