கேரளாவில், தக்காளி காய்ச்சல் என்ற புதுவகை காய்ச்சல் குழந்தைகளை தாக்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மீண்டும் ஊரடங்கு:
கொரோனா வைரஸ் தாக்கம், குறைந்து வரும் நிலையில் நம் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில தினங்களாக புதுவகை காய்ச்சல் பரவி வருகிறது. சிக்கன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும், இந்த புதிய வகை காய்ச்சலுக்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புது வகைக் காய்ச்சலுக்கு கொல்லம் பகுதியில் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவக் கூடும் என்பதால் மாநில எல்லைப் பகுதியில் சோதனை கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்தப் புதுவகை வைரஸ் பரவலால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்