இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு தரும்படி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோரிக்கைக்கு கிடைத்த பரிசு..!
அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் 6 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு வழங்கபடுவதில்லை. மகப்பேறு விடுப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .
சம்பளத்துடன் விடுப்பு..!
கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிகிக்சைக்காக ரூ. 3,500 சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது . இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டத்தை கேரளா அரசு செயல்படுத்தி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |