தற்போது சமூக வலைத்தளங்களில் வனிதா பற்றிய செய்திகள் பரவலாகி வருகிறது. இதற்கு வனிதா பீட்டர் பாலை பிரிந்ததற்கான காரணத்தை கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் கருத்துக்கள் வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த வகையில் தற்போது கஸ்தூரி வனிதா பற்றிய கூறி ட்வீட் வெளியிட்டுள்ளார்.
கஸ்தூரி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. இவர் சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்க்கும் விதமாக குரல் கொடுத்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எதிர்த்து ட்வீட் போட்டு விடுவார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கஸ்தூரி புஸ்ஸென்று ஆகி விட்டார். கஸ்தூரியா இது என்று அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் வனிதாவுக்கு அவரால் ஈடுக்கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இதனை குறித்து கஸ்தூரி பேசியபோது வனிதா அவரை கண்டபடி பேசி கழுவி ஊற்றினார்.
தற்போது வனிதா பீட்டர் பால் இடையே தற்போது பிரச்சனை ஏற்பட்ட நிலையில் வனிதா இது குறித்து சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார். மேலும் தற்போது வனிதா பி.ஜெ,பியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை நக்கல் செய்யும் விதமாக கஸ்தூரி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
vanitha மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!! ஒருமையில்லை, பன்மை ! அடுத்து இணைவது காதலருடனில்லை,கட்சியிலாம்! #HotRumor #BJP
— Kasturi Shankar (@KasthuriShankar) October 24, 2020
அதில் ‘வனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்கன்ற கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சு!!! ஒருமையில்லை, பன்மை அடுத்து இணைவது காதலருடனில்லை,கட்சியிலாம்’ என்று கூறி கலாய்த்துள்ளார்.