தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதே போல, 1.30 கோடி பெண்கள் பயனடையும் வகையில் குருஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000 -வை கர்நாடக அரசு, அம்மாநில பெண்களுக்கு வழங்கி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்பட்டு வரும் இந்த குருஹ லக்ஷ்மி தொகை பொதுவாக, மாதத்தின் முதல் வாரத்திலேயே பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைப்பது வழக்கம். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் குடும்ப தலைவிகளுக்கான ரூ. 2000 வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இந்த தேதியில் தான்? தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்!!!