இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 10 வது சீசனுக்கான போட்டி நேற்று (டிசம்பர் 13) சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியானது பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிராக விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் சென்னை வீரர் ரஃபேல் கிரிவெல்லாரோ ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜோர்டான் முர்ரே ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் ஒரு கோலை நுழைத்தார். இதனால் சென்னை அணியானது, 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுது. கடந்த 4 வருடங்களாக சொந்த மண்ணில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்து வந்த சென்னை இப்போட்டியில் வென்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
IND vs SA T20: தொடரை சமன் செய்யுமா இந்தியா?? தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக கடைசி யுத்தம்!!