கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஏஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, அது பின்னர் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டுமாக ஏஆர் ரஹ்மான் மீது சர்ச்சைக்குரிய மோசடி புகார் ஒன்று எழுந்துள்ளது. அதாவது, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ஏஆர் ரஹ்மானுக்கு 29 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டும் ஏஆர் ரஹ்மான் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த புகாரை மறுத்த ரஹ்மான், அறுவை சிகிச்சை சங்கத்தினர் இன்னும் 15 நாட்களில் மன்னிப்பு கேட்டு ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீஸுக்கு தற்போது பதில் நோட்டிஸ் அனுப்பியுள்ள அறுவை சிகிச்சை சங்கத்தினர் ரூ.15 கோடி இழப்பீடு கொடுத்து ரஹ்மான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.