இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய குஜராத் அணியில் பேட்ஸ்மேன்கள் அபாரமாக செயல்பட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. இதில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் விளாசினார்.
வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் ஓட்டு போட முடியும்.., எப்படி தெரியுமா?? தேர்தல் அதிகாரி விளக்கம்!!!
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் இறுதிக் கட்டத்தில் குஜராத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் 20 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.