உலக கோப்பை செஸ் போட்டியில் தமிழக வீரர் இனியன் பங்கேற்பு.. குவியும் பாராட்டுக்கள்!!!

0

ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) உலகக் கோப்பை செஸ் போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ப.இனியன்  தகுதி பெற்றுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு, உலக கோப்பை செஸ் போட்டியை வரும் ஜூலை 10 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடத்தவுள்ளது. அப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வீரரை தேர்வு செய்ய இந்திய சதுரங்க கூட்டமைப்பினால் இந்திய வீரர்களுக்குள் ஆன்லைன் செஸ் போட்டி நடத்தப்பட்டது.

  

17 இந்திய வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். அதில் ப.இனியன் வெற்றிபெற்றுள்ளார். இதுகுறித்து ப.இனியன் கூறியதாவது, ” மிக நல்ல வீரர்களைக் கொண்ட உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில் நான் விளையாடி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உலகக் கோப்பை செஸ் போட்டிக்கு தகுதி பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ப.இனியன் உலக கோப்பை செஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர், இந்திய சதுரங்க கூட்டமைப்பின் செயலாளர், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் பொது செயலாளர், பயிற்சியாளர் விஸ்வேஸ்வரன் ஆகியோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here