‘இனி தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்’ – சீனா அரசின் அதிரடி மாற்றம்!!

0

உலகின் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாடு என்ற பட்டத்தை பெற்றது சீனா. ஒரு குழந்தைக் கொள்கையை நடைமுறைப்படுத்திய சீனா தற்போது மூன்று குழந்தைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

மூன்று குழந்தைகளுக்கு அனுமதி:

சீனாவில் தான் அதிகமான மக்கள் தொகை உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பதை தடுக்க சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் தான் ஒரு குழந்தைக் கொள்கை . இதனால் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைய தொடங்கியது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இளைஞர்களை விட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 12 மில்லியன் குழந்தைகள் பிறந்தன என்பதை இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சீனாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. 2016ஆம் ஆண்டில் இருந்த 18 மில்லியனை ஒப்பிட்டு பார்க்கும்போது கணிசமான சரிவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட 34.9 மில்லியன் அதிகம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2016ஆம் ஆண்டில் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதியளித்தது. அதனை தொடர்ந்து தற்போது சீனா அரசு மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here