இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி வரும் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது இப்போட்டி நடைபெற உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதன்படி கிங்ஸ்மீட் பிட்ச் முழுக்க முழுக்க வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு பிட்ச். மேலும் மீடியம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இங்கே இரவில் பனிப்பொழிவு ஏற்படுவதால் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இரண்டையும் பந்து வீச்சாளர்கள் நன்கு பயன்படுத்த இயலும். ஆனாலும் இந்த பிட்சில் பேட்டிங்கும் நன்றாக எடுபடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் பார்வையாளர்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் பார்க்க முடியும். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவக்கூடும்.