நியூஸிலாந்து அணிக்கு 348 ரன்கள் இலக்கு – ஷ்ரேயஸ் சதம், கோஹ்லி, ராகுல் அரைசதம்..!

0

இந்தியா – நியூஸிலாந்து அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய 4 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 347 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் ஜாதவ், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார்கள். பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். துவக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (20), மயங்க் அகர்வால் (31) ஆகியோர் அதிரடியாக ஆட முயன்று அடுத்தடுத்து வெளியேறினர். பின்பு களமிறங்கிய கோஹ்லி, ஷ்ரேயஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் கோஹ்லி 61 பந்துகளில் அரை சதத்தை கடந்து அவுட்டானார். இந்த ஜோடி 100 ரன்கள் குவித்தது.

பின்பு 5ம் நிலை வீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் இந்த முறையும் சிறப்பாக ஆடினார். ராகுல், ஷ்ரேயஸ் ஜோடியும் 100 ரன்கள் குவித்தது. 101 பந்துகளில் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சத்தத்தை பதிவு செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். அதே ஓவரில் லோகேஷ் ராகுலும் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 347 ரன்கள் அடித்தது. ராகுல் 88 ரன்களுடனும், ஜாதவ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து 348 ரன்கள் என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here