கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இன்னும் வேகமாக பரவி தான் வருகிறது.கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து பாதுகாத்து அவர்களுக்கு பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக அளித்து வருகிறது இந்தியா அரசு. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் நொடியில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோன தொற்று
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று சனிக்கிழமை (30-05-2020 )காலை வெளியிட்ட நிலவரப்படி இந்தியாவில் 1,65,799- லிருந்து 1,73,763 ஆக கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 265 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4971 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 82370 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 11264 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 86422 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 62228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 20,246, குஜராத்தில் 15,934, டெல்லியில் 17,386, ராஜஸ்தானில் 8,365, மத்திய பிரதேசத்தில் 7,645, உத்தரப்பிரதேசத்தில் 7,284, ஆந்திராவில் 3,436, தெலங்கானாவில் 2,425, கர்நாடகாவில் 2,781, கேரளாவில் 1,150, புதுச்சேரியில் 51 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 7,964 பேருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், 265 பேர் உயிரிழந்துள்ளனர் என்னும் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |