மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை எந்த நாளில் உச்சத்தை அடைந்தது என்ற தகவலை வெளியிட்டு உள்ளது. அந்த தகல்வல்களின் படி கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மே 7ம் தேதி உச்சத்தை அடைந்துள்ளது.
ஆத்தி, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே – 80க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று!!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு இப்போது இறங்குமுகம் காட்டத்தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பில் கணிசமான சரிவைக் காண முடிந்தது. இப்படியே தொடர்ந்தால் அது மக்களிடையே நிம்மதிப்பெருமூச்சு விட வைக்கும்.நாட்டில் தினசரி கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு குறைந்து வருவதன் ஆரம்ப போக்கைப் பார்க்க முடிகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஷ்கார் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கர்நாடகம், கேரளா, தமிழகம், மேற்குவங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று பரவல் அதிகரிக்கும் போக்கைக் காண முடிகிறது தற்போது, சுகாதார அமைச்சகம் கொரோனா இரண்டாம் அலை எந்த நாளில் உச்சம் அடைந்தது என்ற தகவலையும் நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 81.7%லிருந்து 85.6% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 199