துணிவுடன் போராடுவோம், வெற்றி நமக்கு தான் – ராணுவ தளபதி நம்பிக்கை!!

0
army commander
army commander

நமது வீரர்கள் எதையும் சாதிக்க துணிவுடன் இருப்பதாகவும் அவர்கள் நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

எல்லை பதற்றம்:

கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி லே பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி உள் நுழைந்ததால் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதனை தடுக்க பல வீரர்கள் ராணுவம் சார்பில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்ய அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

ராணுவ வீரர்களை ஊக்குவித்தும் வருகின்றனர். தற்போது லே பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இன்று அந்த பகுதிக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே ஆய்வு மேற்கொள்ள சென்றார். ஆய்வுகளை மேற்கொண்ட தளபதி செய்தியாளர்களிடம் பேசினார்.

தளபதி நம்பிக்கை:

அவர் கூறியதாவது ” நமது வீரர்கள் தைரியமாக உள்ளனர். அவர்கள் கண்டிப்பாக நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஏற்பாடுகளை குறித்து கேட்டறிந்தேன். ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றம் இருக்கத்தான் செய்கிறது ஆனால், எனக்கு நம்பிக்கை உள்ளது நம் வீரர்கள் கண்டிப்பாக வெற்றி அடைவார்கள்.”

பிக் பாஸ் 4 இல் இவங்களுமா இருக்காங்க??

Army Commander Manoj Mukund Naravane
Army Commander Manoj Mukund Naravane

“சீன ராணுவத்திடம் நம் நாட்டு ராணுவம் சார்பாக பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. அது நமக்கும் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை கலைக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எது வந்தாலும் நாம் நம்பிக்கையோடு போராடுவோம். வெற்றி நமக்கு தான்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here