பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா – உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது..!

0

தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்தின.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானில் அதிகபட்சமாக ஹைதர் அலி 56 ரன்களும், நசீர் 62 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் சுஷாந்த் மிஸ்ரா 3 விக்கெட்டுகளும், கார்த்திக் தியாகி மற்றும் ரவி பீசோனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட்டும் இலக்காமல் 35.2 ஓவர்களில் 176 ரன்கள் அடித்து இலக்கை எட்டியது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால் (105) சதம் அடித்தார், சக்சேனா 59 ரன்களும் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று U19 கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here