இந்திய அணியானது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், நாளை நடைபெற இருக்கும் 3வது டி20 போட்டியை வெஸ்ட் அணி வென்றால் எளிதில் தொடரை கைப்பற்றி விடும். இதனால், இளம் இந்திய அணி சுதாரித்து கொண்டு 3வது டி20 போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அறிமுக வீரரான திலக் வர்மாவை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் தடுமாற்றம் அடைவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இதில், குறிப்பாக ஐசிசி டி20யின் நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 21, 1 என கடந்த இரு ஆட்டங்களிலும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். இவர் இனி வரும் போட்டிகளில், அடித்து விளையாடினால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வதுடன் வெற்றிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
T20 யின் முதல் ஓவரிலே இத்தனை விக்கெட்டுகளா?? இந்த லிஸ்ட்லையும் இந்தியா தான் டாப்!!