இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மைதானத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IND vs AUS:
நாக்பூரில், பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இரு அணிகளும் முதல் இன்னிங்ஸை விளையாடி முடித்துள்ள நிலையில், இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த போட்டிக்கு பிறகு, இந்திய அணி, 2வது டெஸ்டை டெல்லியிலும், 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகள், தரம்சாலா மற்றும் அகமதாபாத்திலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட திட்டமிட்டிருந்தது. இதில், 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள தரம்சாலாவின் HPCA மைதானமானது, இன்னும் சர்வதேச போட்டி நடைபெறும் அளவிற்கு தயாராக வில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக Engineering கல்லூரி கவுன்சிலிங்கில் அதிரடி மாற்றம்., அண்ணா பல்கலைக்கழகம் முடிவு!!!
அதாவது, தற்போது இந்த மைதானத்தை புதுப்பிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளதால், 3வது டெஸ்ட் போட்டியானது, இடம் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை போட்டி மாற்றப்பட்டால், விசாகப்பட்டினம், புனே, இந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு மாற்றப்பட கூடும். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.