தமிழக அரசுக்கு பால் உற்பத்தியாளர்கள் அதன் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனர். இதற்கு அரசு செவி சாய்க்காமல் இருந்த நிலையில் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி இனி வரும் நாட்களில் பால் கொள்முதல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.
இதனால் விவசாய பால் உற்பத்தியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளோம். ஒரே ஆண்டில் கொள்முதல் விலை 6ரூபாய் உயர்த்திய ஆட்சி எது என்றால் திமுக தான் என்று கூறியுள்ளார்.