இன்றைய காலகட்டத்தில் தங்க நகைகள் அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல் சிறந்த முதலீடு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக, பெரும்பாலனோர் தங்க நாணயங்களாக வாங்கி வருகின்றனர். இருந்தாலும் வீடுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்க நகைகளை வைத்திருக்கக் கூடாது என வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களே.., இதை உடனே செய்ய வேண்டும்.., கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவு!!!
அதன்படி திருமணமான அல்லது திருமணமாகாத ஆண் உறுப்பினர் என்றால் 100 கிராம் வரையிலும், திருமணமான பெண் என்றால் 500 கிராம் வரையிலும், திருமணமாகாத பெண் என்றால் 250 கிராம் வரையிலும் என குடும்பத்தில் ஒவ்வொருவராக கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஒரு கணவன் மனைவி என்றால் 600 கிராம் வரையிலும் வைத்திருக்கலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், அந்த தங்க நகைகளை வருமான வரித்துறை சோதனையின் போது பறிமுதல் செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.