தமிழக அரசு ஓய்வூதியதாரர்களே…, உங்களுக்கான ஹேப்பி நியூஸ்…, , இனி ஆண்டு முழுவதும் யூஸ் பண்ணிக்கலாம்!!

0
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களே..., உங்களுக்கான ஹேப்பி நியூஸ்..., , இனி ஆண்டு முழுவதும் யூஸ் பண்ணிக்கலாம்!!
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களே..., உங்களுக்கான ஹேப்பி நியூஸ்..., , இனி ஆண்டு முழுவதும் யூஸ் பண்ணிக்கலாம்!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தற்போதைய முக்கிய குறிக்கோளாக இருப்பது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதே. இதற்காக, தமிழகத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலவித போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்களது, போராட்டங்களுக்கு தமிழக அரசு நிச்சயம் செவி சாய்க்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வூதியதாரர்களுக்கான சூப்பர் அப்டேட் ஒன்றை தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணலை தமிழக நிதித்துறை ஏற்படும் செய்யும்.

முதல தியேட்டர்.., இப்ப பெட்ரோல் கிணறா?.., சினிமாவை தாண்டி சம்பாதிக்க நினைக்கும் நயன்தாரா.., பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்!

இந்த நேர்காணல் மூலம், குறிப்பிட்ட ஓய்வூதியதாரர் உயிருடன் தான் உள்ளார் என்பதை அறிந்து கொள்வதுடன், அவர் தங்களது வாழ்நாள் சான்றிதழ்களையும் சமர்ப்பித்து செல்கின்றனர். தற்போது, அரசு ஓய்வூதியத்தாரர்களுக்கான இந்த நேர்காணலை ஆண்டு முழுவதும் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு ஓய்வூதியதாரர்கள் ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் தான் நேர்காணல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here