முதல தியேட்டர்.., இப்ப பெட்ரோல் கிணறா?.., சினிமாவை தாண்டி சம்பாதிக்க நினைக்கும் நயன்தாரா.., பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்!

0
முதல தியேட்டர்.., இப்ப பெட்ரோல் கிணறா?.., சினிமாவை தாண்டி சம்பாதிக்க நினைக்கும் நயன்தாரா.., பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்!
முதல தியேட்டர்.., இப்ப பெட்ரோல் கிணறா?.., சினிமாவை தாண்டி சம்பாதிக்க நினைக்கும் நயன்தாரா.., பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு சமமாக ரசிகர்களை வைத்திருப்பவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் அட்லீ இயக்கும் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்த இவருக்கு, அடுத்தடுத்து படங்களில் பாலிவுட்டில் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். சமீபத்தில் நயனும் விக்கியும் இணைந்து வடசென்னை பகுதியில் இருக்கும் பிரபல திரையரங்கமான அகஸ்தியா தியேட்டரை வாங்கியதாக தகவல் வெளியாகின.

TNPSC தேர்வை எந்திரன் பட பாணியில் எழுதிய மாணவன்.., கையும் களவுமாக சிக்கிய அவலம்!!!!

ஆனால் இதனை முற்றிலும் தியேட்டர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் நயனை குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, நடிகை நயன்தாரா துபாயில் ஒரு நண்பருடன் சேர்ந்து 50 கோடி மதிப்பில் பெட்ரோல் கிணற்றை வாங்கி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அதற்காக தான் அவர் அடிக்கடி துபாய் போயிட்டு வருகிறார் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here