மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி !!!

0

கொரோனா பேரிடர் காலத்தில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணிகளில் முக்கிய பங்காற்றுபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது திருவாரூர் ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி :

நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் தடுப்பூசியும் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களுக்கு தடுப்பூசி மற்றும் அதன் நன்மை குறித்து தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொற்று பரவாமல் காக்கும் எனவும் கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நோய் பரவாமல் தடுக்க பலர் முன்வந்து தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் களப்பணியில் ஈடுபடுபவர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்படுவது அதிகமாகி வருகிறது. தற்போது வெளியான தகவலின் படி முன்களப்பணியில் ஈடுபட்டு வந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here